அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் திங்களன்று பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை பணிநீக்கம் செய்ததை தொடர்ந்து, மற்றொரு பென்டகன் அதிகாரி நேற்று செவ்வாய்க்கிழமை தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
இது பாதுகாப்புத் துறையிலிருந்து மற்றொரு உயர்மட்ட அதிகாரி விலகியதைக் குறிக்கிறது.
உளவுத்துறையின் பாதுகாப்பு செயலாளரா ஓய்வுபெற்ற கடற்படை வைஸ் அட்மிரல் ஜோசப் கெர்னன் தனது பதவியை விட்டு விலகியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
"எனது ராஜினாமா அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும். எங்கள் தேசத்துக்கான அயராத அர்ப்பணிப்புக்கும், கடந்த மூன்று ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் என்னை ஆதரித்தமைக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
உங்கள் அனைவருடனும் சேவையாற்றியதற்கு பெருமை கொள்கிறேன். எனது குடும்பமும் நானும் இந்த முடிவை நீண்ட காலமாக திட்டமிட்டுள்ளோம், இந்த தேசத்தின் பாதுகாப்பிற்கான உங்கள் அயராத அர்ப்பணிப்புகள் முயற்சிகள் தொடரும் என்பதை அறிந்து கொள்கிறேன் " என கெர்னன் தனது ராஜினாமா குறித்து சகாக்களுக்கு தெரிவித்துள்ளார்.
எஸ்பரை "பணிநீக்கம் செய்துவிட்டேன்" என்று ட்ரம்ப் திங்களன்று தெரிவித்தார், மேலும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் கிறிஸ்டோபர் சி மில்லர், பாதுகாப்பு செயலாளராக செயல்படுவார் என அறிவித்துள்ளார்.
ஜேம்ஸ் மாட்டிஸுக்குப் பதிலாக 2019 ஆம் ஆண்டில் எஸ்பர் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM