பல வருடங்கள் பழமையான மா மரமொன்று முறிந்து விழுந்ததால் வீடொன்றும், பஸ்ஸொன்றும் சேதமடைந்துள்ளன.
நுவரெலியா, ஹங்குராங்கெத்த - உடவத்த ஊடான கலவுட வீதியில் உடவத்த கல்லூரிக்கு அருகிலுள்ள நிலத்தில் இருந்த மரமொன்றே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.
இதனால் குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் சேதமடைந்துள்ளது.
அத்துடன், இம்மரத்தின் கிளையொன்று அருகில் இருந்த மற்றுமொரு மரம் மீது விழுந்ததில் அம்மரமும் சரிந்து விழுந்துள்ளதால் வீடொன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசி சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் குறித்த மரத்தை வெட்டி அகற்றுவதற்கு பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ள நிலையில் குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது. இந்நிலையில், அதனை வெட்டியகற்றுவதற்கு தாமதம் ஏற்பட்டதாலேயே அவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஹங்குராங்கெத்த பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.
இன்றைய தினத்துக்குள் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பும் அதுவரையில் மாற்று வழியை பயன்படுத்துமாறும் அவர் கோரினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM