(இராஜதுரை ஹஷான்)
போலியான குற்றச்சாட்டுகளை முன்னைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பலதரப்பட்ட நடவடிக்கைகளை செயற்படுத்தியுள்ளது.
கொவிட்-19 வைரஸ் மாதிரிகளை பரிசோதனை செய்யும் இயந்திரத்தை அரசாங்கம் எவ்வித விலை மனுகோரலுமின்றி் கொள்வனவு செய்துள்ளதாக எதிர்தரப்பினர் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்.
கொவிட்-19 வைரஸ் மாதிரிகளை கண்டறியும் சாதனம் ஏதும் கொள்வனவு செய்யவில்லை,அதற்கு விலை மனுகோரலும் விடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
போலியான குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு எதிர்தரப்பினர் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் செயற்படுகின்றனர்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை சிறந்த திட்டமிடல் ஊடாக வெற்றிக் கொள்ளப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM