கூட்டு எதிர்கட்சியின் எதிர்ப்பு பேரணி வரலாறு படைக்கும் (படங்கள் இணைப்பு)

Published By: Ponmalar

25 Jul, 2016 | 07:35 PM
image

(கா. சந்திரன்)நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் மேற்கொள்ளப்பட  உள்ள எதிர்ப்பு பேரணி வரலாறு படைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர்  உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்துக்கு எதிராக மஹிந்த தரப்பு ஆதரவாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் கூட்டு எதிரணியினர்  கண்டியில் மேற்கொள்ள உள்ள பாத யாத்திரையில் பொது மக்களை ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கும் வகையில் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக கூட்டு எதிர்க்கட்சியினர் துண்டு பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அங்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில, லட்சக்கணக்கான பொது மக்கள் மீண்டும்  மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வர வேண்டும் என ஆவல் கொண்டிருக்கின்றார்கள். எனவே பொது மக்கள் எம்மோடு இந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டு புது யுகத்துக்கான தேவையினையும் மைத்திரி ரணில் இணைந்த தேசிய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலை திட்டத்துக்கும் வழி வகுப்பார்கள்.எதிர்வரும் 27 ம் திகதி கண்டியில்  விசேட பூஜைகளுடன் எமது இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமாக உள்ளது. இதன்படி 28 ம் திகதி கண்டியிலும் , 29 ம் திகதி மாவனெல்லையிலும் ,30 ம் திகதி நெழுந்தேனியவிலும் ,31 ம் திகதி நிட்டம்புவவிலும் ,தொடர்ந்து முதலாம் திகதி கொழும்புக்கும் நாம் எமது எதிர்ப்பு பேரணியினை மேற்கொள்ள உள்ளோம்.  தேசிய அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல்கள் ,புதிய அரசியல் அமைப்பினால்  நாட்டுக்கு எதிராக இடம்பெற்றுள்ள சதி,  உள்ளளுராட்சி  மன்ற தேர்தலைகளை  திட்டமிட்ட  முறையில்  சரியான நேரத்தில் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றமை, இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம், வற் வரி அதிகரிப்பு ,விவசாயிகளுக்கு மானிய உரங்களை வழங்காமல் ரத்து செய்து வருகின்றமை ஆகிய காரணங்களை  முன்வைத்தே இந்த எதிர்ப்பு பேரணி நடத்தப்பட உள்ளது என்றார்.இந்த துண்டு பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில்  கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல ரோஹித அபேகுணவர்தன,குமார வெல்கம,பந்துல குணவர்தன ,உதய கம்பன்பில,டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்து  கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04