சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிக அளவில் உயர்ந்து வருகிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விட்டால் பாதங்கள் பாதிக்கப்படும்.
இந்நிலையில், நீரிழிவு நோயால் பாதங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிய எலக்ட்ரோமயோகிராஃபி என்ற புதிய பரிசோதனை முறை அறிமுகமாகி நல்லதொரு பலன்களை வழங்கி வருகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோயால் சிறுநீரகம், கண்கள், இதயம் ஆகிய உறுப்புகளை போல பாதங்களையும் பாதிக்கிறது.
பெரும்பாலானவர்களுக்கு ஏனைய உறுப்புகளைப் போல பாதங்கள் பாதிக்கப்பட்டால் அவற்றை தொடக்க நிலையில் உணர்வதில்லை.
ஆகவே, ஆண்டுதோறும் சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை செய்து கொள்ளும்போது, பாதங்களுக்கான பிரத்தியேக பரிசோதனையும் செய்து கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பாதங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை கண்டறிவதற்காக imaging test எனப்படும் ஸ்கேன் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, quantitative sensory testing எனப்படும் உணர்வு தொடர்பான பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை செய்வர்.
சிலருக்கு பாதிப்புகளை துல்லியமாக கண்டறிவதற்காக தற்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் எலக்ட்ரோமயோகிராபி என்ற பரிசோதனையை பரிந்துரைக்கிறார்கள்.
எலக்ட்ரோ பயோகிராபி என்ற பரிசோதனையின் போது, பாதங்களில் உள்ள கூச்ச உணர்வு, உணர்வின்மை, தசை பலவீனம், தசை வலி, தசை பிடிப்பு, சில வகையிலான மூட்டு வலி ஆகியவற்றை துல்லியமாக கண்டறிய இயலும்.
இதன்பிறகு அவர்களுக்கு எம்மாதிரியான சிகிச்சையை வழங்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் தீர்மானித்து சிகிச்சை அளிப்பார்கள்.
சிலருக்கு பிரத்தியேக காலணிகளையும், காலணி உறைகளையும் அணிய வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.
சிலருக்கு பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துவார்கள்.
டொக்டர் பார்த்திபன்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM