பாரீஸ் மாஸ்டர் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி, டேனியல் மெட்வெடேவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது.
இதில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட உலகின் 2 ஆம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபெல் நடால் அரையிறுதி போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 7 ஆம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், தரவரிசையில் 5 ஆவது இடம் வகிக்கும் ரஷ்ய வீரர் டேனியல் மெட்விடோவிடம் மோதினர்.
சுமார் 2 மணி நேரமும் 7 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் மெட்விடேவ் 5-7, 6-4, 6-1 என்ற செட்டில் ஸ்வெரேவை வீழ்த்தி பட்டத்தை தட்டிச்சென்றார்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை ருசித்த 4 ஆவது ரஷ்ய வீரர் என்ற பெருமையை 24 வயதான மெட்வெடேவ் தன் வசம்படுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM