அமெரிக்காவின் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரிஸ், என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ் டெலவர் நகரில் மக்களிடம் உரையாற்றினார்.
இதன் போது மேலும் தெரிவித்த கமலா ஹாரிஸ்,
என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி. வெற்றிக்கு உழைத்த மற்றும் வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய அமெரிக்க மக்களுக்கு நன்றி.
மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர் சிறந்த எதிர்காலத்திற்காக. இது அமெரிக்காவுக்கு புதிய நாள்.
ஜனநாயகத்தை உருவாக்க உழைத்த அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். மக்களின் குரலுக்கு தெளிவான பதில் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடனை தெரிவு செய்துள்ளீர்கள்.
நம்பிக்கையுடன் அமெரிக்கா வந்த எனது தாயை இந்த வெற்றி தருணத்தில் நினைவு கூருகின்றேன்.
ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு செயல்.
துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நான் முதல் பெண் தான், கடைசி பெண் அல்ல. இது தொடக்கம் தான். ஒரு பெண்ணை துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருந்திருக்கிறது.
நமது நாட்டின் பெண்களுக்கு நிறைய சாத்தியங்கள் உருவாக காத்திருக்கின்றன. கடந்த 4 ஆண்டாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். இன வெறியை அகற்றுவோம் என உறுதிபடக் கூறுகிறேன்.
பைடனுக்கு வாக்களித்ததன் மூலம் நம்பிக்கை, கண்ணியம், ஒற்றுமைக்கு வாக்களித்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸின் உரையை கேட்பதற்கு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM