மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 48 மணித்தியாலயம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காக்காச்சிவட்டையில் நேற்று முன்தினம் இரவு விஜிதா (24 வயது) அவருடைய மகள் மற்றும் விஜிதாவின் தந்தை ஆகியோர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இக்கொலை தொடர்பில் விஜிதாவின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இவரை 48 மணித்தியாலம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்வதற்கு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எஸ்.றிஸ்வி அனுமதி வழங்கியுள்ளார்.
-----------------------
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வெட்டி படுகொலை : மட்டக்களப்பு வெல்லாவெளியில் அகோரம்
மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டையில் பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடந்த சனிக்
கிழமை இரவு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பச்சிளம் குழந்தையான லக்சிகா அவரது தாயான விஜித்தா மற்றும் விஜித்தாவின் தந்தை ஆகிய மூவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக
வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவியும் குழந்தையும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் சனிக்கிழமை நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த விஜித்தாவின் கணவரான எம்.பிரசாந் (வயது 34) விஜித்தாவையும (வயது 24) அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக் கிணற்றுக்குள் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நேரம் அயல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விஜித்தாவின் தந்தையான 56 வயதுடைய கந்தையா பேரின்பம் தனது மகள் விஜித்தாவினதும் பேரக்குழந்தையான லக்சிகாவினதும் அழும் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த போது கொலையாளியான தனது மருமகன் பிரசாந்த் மாமனார் கந்தையாவையும் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெட்டுகாயங்களுக்கு உள்ளான விஜித்தாவின் தந்தை பேரின்பம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டபோது சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.றிஸ்வி ஸ்த்தளத்தில் விசாரணைகளை மேற் கொண்டார்.
இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணை செய்துவரும் வெல்லா வெ ளி பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய தாக கூறப்படும் கொலை செய்யப்பட்டுள்ள விஜிதாவின் கணவரான எம்.பிரசாந் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் நகாக்காச்சிவெட்டைக் கிராமத்தில் மறைந்திருந்தபோது ஞாயிற்றுக்கிழமை காலை அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர். கொலை செய்யப்பட்டுள்ள விஜிதா மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள எம்.பிரசாந் ஆகிய இருவரும் கணவன் மனைவியெனவும் இவரது பிள்ளையே லக்சிகா எனும் சிறுமியெனவும் கனவன் மனைவியான இவர்கள் இருவரும் கடந்த ஒருவருடமாக பிரிந்து வாழ்வதாகவும் ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்தள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
இவ்விருவருக்குமிடையில் நீண்ட நாட்களாக இருந்துவந்த குடும்பத் தகராறே இந்தப் படுகொலைக்கு மூலகாரணமான அமைந்துள்ளதென்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமையன்று முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் கணவன்- மனைவி ஆகியோர் வெல்லாபொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM