ஆப்கானிஸ்தானில் இன்று இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் முன்னாள் செய்தி வர்ணனையாளர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
குறித்த தாக்குதலில் அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனமான ’டோலோ செய்தி’ நிறுவனத்தில் செய்தி வர்ணனையாளராக பணியாற்றி விலகிய யமா சைவாஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த செய்தி வர்ணனையாளர் அண்மையில் பணியில் இருந்து விலகி ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் ஆலோசகராக பணியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், காபுல் மாகாணத்தில் உள்ள யமா சைவாஷ் வீட்டில் உள்ள அவரது காரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பியுள்ளனர்.
அந்த காரில் யமா வெளியே சென்றபோது வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் வெடித்துச் சிதறியது. இந்த வெடிவிபத்தில் யமா சைவாஷ் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் தலிபான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM