மாங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசியத்தகவல் ஒன்றினடிப்படையில் கேரளா கஞ்சா விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில் ,
மாங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசியத்தகவல் ஒன்றினடிப்படையில் நேற்று மேற்கொண்ட நடவடிக்கையின் போது 800 கிராம் கேரளா கஞ்சாவை விற்பனையில் ஈடுபட்டபோது நபரை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவரிடமிருந்து 65 ஆயிரம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் இரணைமடுவில் வசித்து வருவதுடன் நீண்ட காலமாக இரகசியமான முறையில் கேளரா கஞ்சா விற்பனை நடவடிகையில் முகவராக செயற்பட்டு வருவது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
தற்போது மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM