(செ.தேன்மொழி)
பொலிஸாரினால் கடந்த 25 ஆம் திகதிக்கு பின்னராக வழங்கப்பட்ட தண்டப்பண பத்திரத்திற்கு மேலதிக பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியுள்ளதாவது,
வாகன சட்ட ஒழுங்கை மீறியமை தொடர்பில் கடந்த மாதம் 25 ஆம் திகதி மற்றம் அதற்கு பின்னர் விதிக்கப்பட்ட அபராத பத்திரங்களுக்காக மேலதிக பணம் அறவிடப்படமாட்டாது என தபால்மா அதிபரினால் சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கு அமைய பொலிசாரினால், வழங்கப்பட்டுள்ள இந்த அபராத பத்திரங்கள், 14 நாட்கள் தொடக்கம் 27 நாட்களுக்குள் கடந்திருப்பினும் அதற்காக மேலதிக பணத்தை தபாலகத்திற்கு செலுத்த வேண்டிய தேவை இல்லை.
குறிப்பிட்ட அபராத பணத்தை மாத்திரம் செலுத்தினால் போதுமானதாகும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM