சுகாதார அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி லங்கா பிரீமியர் லீக்கானது முன்னர் கூறப்பட்ட திகதியையும் விட ஆறு நாட்கள் கழித்து நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகும்.
இப் போட்டிகள் அனைத்தையும் சூரியவேவ கிரிக்கெட் மைதானதில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை போட்டிகளை நடத்துவதற்கு அரசாங்கம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு குறைந்த அளவிலான தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார ஆலோசனைகளை பிறப்பித்துள்ளது.
நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு வீரர்களும், ஏனைய குழுவிருனம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று முன்னர் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.
இந் நிலையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் அது ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் வீரர்கள் எல்.பி.எல். தொடருக்காக அமைக்கப்படும் பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM