2016 ஆம் ஆண்டு முதல் பிலிப்பைன்ஸில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் சுமார் 8,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பிலிப்பைன்ஸ் தகவல் முகமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஜூலை முதல் 234,000 க்கும் மேற்பட்ட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது 357,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் பிலிப்பைன்ஸின் தேசிய காவல்துறை ஆணையாளர் ஒரு செய்தி மாநாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கைகளின்போது குறைந்தது 1.29 மில்லியன் மக்கள் சரணடைந்துள்ளதாகவும் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்தும் செயற்படுவோம் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே இந்த நடவடிக்கை போதைப்பொருளை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தபோதும், மனித உரிமை குழுக்களால் இவை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (HRW) கருத்துப்படி, துதெர்த்தே போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் 12,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொலை செய்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது.
அது மாத்திரமின்றி பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை "சட்டவிரோத கொலைகளை நியாயப்படுத்துவதற்கான ஆதாரங்களை பொய்யாக்குகிறது" என்றும் HRW குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM