அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: 6 'எலக்ட்டோரல் காலேஜ்' உறுப்பினர்களின் ஆதரவுக்காக காத்திருக்கும் ஜோ பைடன்

06 Nov, 2020 | 12:22 AM
image

அமெரிக்க ஜனாதிபதியாக , ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு இன்னும் 6 'எலக்ட்டோரல் காலேஜ்' உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது 264 பேரின் ஆதரவு உள்ளது. ட்ரம்புக்கு 214 பேரின் ஆதரவும் உள்ளது.

இந்த நிலையில், பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களின் முடிவே, யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்க உள்ளது.

அமெரிக்க தேர்தல் வரலாற்றில், மிகவும் கடுமையான போட்டியை சந்தித்துள்ள தேர்தலாக, 2020 ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளது.

குடியரசு கட்சியின், ஜனாதிபதி, டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின், முன்னாள் துணை ஜனாதிபதி, ஜோ பைடன், இடையே ஆரம்பத்திலிருந்தே கடும் போட்டி நிலவியது. ஆனால், பின்னர் வந்த கருத்துக் கணிப்புகள், ஜோ பைடனுக்கு ஆதரவாக இருந்தன.

தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகள், 'பாப்புலர்' வாக்குகள் எனப்படும். அதாவது, அவை ஜனாதிபதி வேட்பாளருக்கு கிடைத்தாலும், அதிக வாக்குகளை பெறுபவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட மாட்டார். ஒவ்வொரு மாகாணத்திலும், மக்கள் எந்தக் கட்சிக்கு அதிக வாக்களிக்கின்றனர் என்பதன் அடிப்படையிலேயே, ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மாகாணங்களின் அளவுக்கு ஏற்ப, மொத்தம், 538 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும் வாக்காளர் குழுவுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும், எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் தான், ஜனாதிபதியை தேர்வு செய்வர். அதன்படி, 270 வாக்குகளை பெறுபவர், ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார். இந்த நிலையில், வாக்குப் பதிவு முடிந்து,வாக்குப எண்ணும் பணிகள் நேற்று துவங்கியது. ஆரம்பத்தில் இருந்தே, இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடனுக்கு, 264, 'எலக்டோரல் காலேஜ்' உறுப்பினர்கள் ஆதரவும், டிரம்புக்கு, 214 பேரின் ஆதரவும் உள்ளது.

கிட்டத்தட்ட பெரும்பாலான மாகாணங்களில் முடிவுகள் தெரிந்துள்ள நிலையில், பென்சில்வேனியா, விஸ்கான்சின், வடக்கு கரோலினா, ஜார்ஜியா, நவேடா மாகாணங்களில் முடிவுகள் தெரியவில்லை. இந்த மாகாணங்கள் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லாமல், இழுபறி மாகாணங்கள் என்பதால், இவற்றின் முடிவுகள் தெரிந்தால் தான், யார் அடுத்த ஜனாதிபதி என்பது தெரியவரும். அதனால், அமெரிக்க மக்கள் மட்டுமல்லாமல், உலகமே, இந்த மாகாணங்களின் முடிவுக்காக காத்திருக்கின்றது. பென்சில்வேனியாவில் மட்டும், 20 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன.

இதனிடையே மிச்சிகன் மாகாணத்தில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். நவேடா, விஸ்கான்சின் மாகாணங்களில் முன்னிலையில் உள்ளார்.

வடக்கு கரோலினா, ஜார்ஜியா, பென்சில்வானியா மாகாணங்களில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17