கொரோனாவால் மேலும் 5 பேர் பலி!

Published By: Jayanthy

05 Nov, 2020 | 07:06 PM
image

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

46 ,68, 58, 73 மற்றும் 74 வயதுடைய 03 பெண்கள் மற்றும் 02 ஆண்கள் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

இதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. 

உயிரிழந்தவர்களின் விபரம்...

01. ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட நிலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு  02 ஐ சேர்ந்த 46 வயது ஆண் நபர் நேற்று ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவர் ஒரு  நீரிழிவு நோயாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02. வெல்லம்பிடியை சேர்ந்த 68 வயது பெண் நெஞ்சுவலி காரணமாக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

03.கொழும்பு 12 ஐ சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

04. கொழும்பு 14 ஐ சேர்ந்த 73 வயது பெண் ஒருவர் அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட நுரையீரல் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

05. கொழும்பு 15 ஐ சேர்ந்த 74 வயது ஆண் ஒருவர் அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50