மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பைப் கடவை கிராம அலுவலகர் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மனிதாபிமானத்திற்கு அப்பால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது படுகொலை தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய்ககூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு இன்று வியாழக்கிழமை(5) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பைப் கடவை கிராம அலுவலகர் எஸ்.விஜியேந்திரன் என்வரின் கொலையை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.
இவ்வாறான கொடூரமான படு கொலைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. இவ்வாறான படுகொலைக் கலாச்சாரம் நமது மண்ணிலிருந்து கலைந்தெறியப்பட வேண்டும்.
இவ்வாறான கொலை அன்மைக்காலங்களில் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வருவதை நான் அவதானித்து வருக்கின்றேன்.
குறித்த சம்பவங்கள் சட்டம், ஒழுங்கு சார் பிரச்சினையை தோற்றுவிப்பதோடு எமது பகுதியில் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் என்பதனையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
மேலும் இந்த கொலையின் பின்னனியில் உள்ள நபர்கள் யார்? என்பதனை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தன்டனை வழங்க வேண்டும். என அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM