வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வீதியில் உறங்கிக்கொண்டிருந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று (05.11) அதிகாலை 12.40 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வேலைக்கு சென்ற குறித்த இளைஞன் கடமைகளை முடித்துக்கொண்டு வீரபுரம் நோக்கி வவுனியா செட்டிகுளம் பிரதான வீதியூடாக சென்றுள்ளார்.
சூடுவெந்தபுலவு பகுதியினை அண்மித்த சமயத்தில் வீதியில் உறங்கிக்கொண்டிருந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான 26 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த உளுக்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM