நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதய காலநிலை மாற்றம் தொடர்பில் இன்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே ரீ.பிரதீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வளிமண்டல நிலைமையானது, பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாக காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் கரையோர பிரதேசத்தில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, வடமத்திய, ஊவா, வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், இடிமின்னல் தாக்கத்தில் ஏற்படும் இழப்புக்களை குறைப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்தும் அதே வேளை இடிமின்னல் தாக்கம் ஏற்படும் வேளைகளில் காற்று வேகமாக வீசக்கூடிய சூழ்நிலை எற்படும்.
நேற்று 4 ஆம் திகதி காலை 8.30 மணி இருந்து 5 ஆம் திகதி காலை 8.30 மணிவரை, யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் 11.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், அச்சுவேலி பகுதியில் 8.3 மி.மீ மழை வீழ்ச்சியும், பருத்தித்துறை பகுதியில் 4.8 மி.மீ மழை விழ்ச்சியும், கோட்டை பகுதியில் 0.8 மி.மீ மழை வீழ்ச்சியும், நெடுந்திவு பகுதியில் 7.0 மி.மீ மழை வீழ்ச்சியும், ஒட்டுச்சுட்டான் பகுதியில் 9.8 மி.மீ மழை வீழ்ச்சியும், ஆணையிறவு பகுதியில் 10.0 மி.மீ மழை வீழ்ச்சியும், சாவகச்சேரி பகுதியில் 4.9 மி.மீ மழை வீழ்ச்சியும், யாழ்ப்பாணம் 12.6 மி.மீ மழை வீழ்ச்சியும், அக்கராயன் பகுதியில் 8.0 மி.மீ மழை வீழ்ச்சியும் மற்றும் தெல்லிப்பழை பகுதியில் 0.7 மி.மீ மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் மழை வீழ்ச்சி குறைவாகவே காணப்படுகின்றது. லானினே நிலைமை என சொல்லப்படுகின்ற காலநிலை காரணமாக, பொதுவாக எமது மழை வீழ்ச்சி ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகமாக காணப்படும்.
இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் மிக குறைவாக 23.3 மி.மீ மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது. அது மாத்திரமின்ற நவம்பர் மாதத்திலும் குறைந்த மழை வீழ்ச்சியே எதிர்பார்க்கப் படுகின்றது, டிசம்பர் மாதமாகப் பகுதியில் ஓரளவு மழை வீழ்ச்சி எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM