நாட்டில் பரவிவரும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது போலவே நாட்டை முடக்காமலிருப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டிருக்கும் அசாதாரண சூழ்நிலைக் காரணமாக, ஒவ்வொரு தீர்மானம் எடுக்கும் போதும், அனைத்து விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தியே தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும், சுகாதார அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிவரும் போதிலும், அவர்களுக்கு தொற்று ஏற்படாமைக்கு காரணம் அவர்கள் உரிய சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதாலாகும்.
அவர்களை போல சுகாதார வழிமுறைகளை ஏனையோரும் கடைப்பிடித்தால், நாட்டை சிறப்பான முறையில் முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும். முக்கியமாக மக்கள் சுகாதார வழிமுறைகளை உரியவாறு கடைப்பிடித்தால் நாட்டை முடக்க அவசியமில்லை என்றார்.
அத்தோடு, நாட்டை முடக்கினால் அன்றாடம் உழைத்து வருமானம் பெறுபவர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்.
ஆகவே குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மாத்திரம் கவனத்தில் கொண்டு நாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானிக்க முடியாது. அனைத்து பிரிவினர் தொடர்பிலும் கவனம் செலுத்தியே இவ்விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM