பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
பதுளை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்து இதன்போது ஆழமாக ஆராயப்பட்டது.
பதுளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பெருந்தோட்டங்களுக்கு வழங்கப்படும் 10ஆயிரம் ரூபா அரச நிவாரண பொதியில் கிராமங்கள் போல் அல்லாது பெருந்தோட்டங்களில் உள்ள தமிழ் மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென இதன்போது செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்ததுடன், இந்த கோரிக்கையின் பிரகாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பெருந்தோட்டங்களுக்கு விசேட உணவு பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண ஆளுனர் முஸாம்மில், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டமான், ப.உ. மேஜர் ஜெனரால் தெனிபிட்டிய, பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM