அமெரிக்காவில் நடைபெற்று வரும் தேர்தலில் போட்டியிட்டுதன் மூலம் நான்கு ஜனநாயக கட்சியின் இந்திய அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கபடுகின்றது.
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில் இந்த தேர்தலில் நான்கு இந்திய அமெரிக்க ஜனநாயக சட்டமன்ற உறுப்பினர்களான டாக்டர் அமி பெரா, பிரமிலா ஜெயபால், ரோ கன்னா மற்றும் ராஜ கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை மீண்டும் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ் கருத்துப்படி, இன்று மதியம் வரை பெரா 61% வாக்குகள், ஜெயபால் 84.8%, கன்னா 74.1%, கிருஷ்ணமூர்த்தி 71.1% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜனநாயக கட்சியின் ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுடில்லியில் பிறந்த 47 வயதான கிருஷ்ணமூர்த்தி, லிபர்டேரியன் கட்சியின் வேட்பாளர் பிரஸ்டன் நெல்சனை எளிதில் தோற்கடித்தார். இருதி தேர்தல் முடிவு வெளியான போது, அவர் கணக்கிடப்பட்ட மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 71 சதவீதத்தைப் பெற்றுள்ளார்.
ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ராஜா கிருஷ்ணமூர்த்தி முதன்முதலில் 2016 ல் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆறாவது காங்கிரஸின் மாநிலமான அரிசோனாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் தற்போதைய டேவிட் ஸ்வெய்கெர்ட்டுக்கு (49.7%) எதிராக டாக்டர் ஹிரால் திப்பிர்னேனி 3 சதவீத புள்ளிகளுக்கு சற்று முன்னிலை வகித்து 50.3% வாக்குகளைப் பெற்றார்.
இதில் திப்பிர்னேனி தேர்ந்தெடுக்கப்பட்டால், 52 வயதான திப்பிர்னேனி, பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்திய அமெரிக்க பெண்மணி ஆவார்.
இதேவேளை 55 வயதான ஜெயபால், பிரதிநிதிகள் சபைக்கு 2016 ல் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அமெரிக்க சமூகம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானமிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, பதிவு செய்யப்பட்ட இந்திய அமெரிக்க வாக்காளர்களில் 72% பேர் பிடனுக்கு வாக்களிக்கத் திட்டமிட்டிருந்தனர், 22% பேர் டிரம்பிற்கு வாக்களிப்பதாகக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM