(க.பிரசன்னா)
கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்துடன் தொடர்புகொள்வதற்கு துரித தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று, அதனுடன் தொடர்புபட்ட நிலைமையின்போது பொதுமக்களுக்கு கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்துடன் இலகுவாக தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் இந்த துரித தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடமை அதிகாரியுடன் 011 2860002 / 011 2860003 / 011 2860004 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனும் covid195120@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியூடாகவும் தொடர்புகளை மேற்கொள்ள முடியுமென்பதுடன் கடற்படை மற்றும் விமானப்படை கடமை அதிகாரியுடன் 011 4055932 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவுடன் 011 3688664 / 011 3030864 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனும் தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.
இதற்கமைவாக கொவிட் 19 தொற்று மற்றும் தொடர்புபட்ட அவசர மற்றும் முக்கிய அறிவிப்பு, விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும் என கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM