குழந்தையை பிரசவித்த தாய் குழந்தையை வைத்தியசாலையில் விட்டுவிட்டு தப்பியோட்டம்

Published By: Digital Desk 4

03 Nov, 2020 | 04:23 PM
image

மட்டு பேதனா வைத்தியசாலையில் குழந்தை ஒன்றை பிரசவித்த தாய் பெண் குழந்தையை வைத்தியசாலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியாலை நிர்வாகம் நேற்று திங்கட்கிழமை (02) அறிவித்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் குழந்தை பிரசுவிப்பதற்காக கடந்த செட்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

அந்த குழந்தை எடை குறைவு காரணமாக கண்ணாடி பெட்டியில் வைத்து வைத்தியர்களின் கண்காணிப்பில் தாயார் குழந்தையை பராமரித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்த குழந்தையின் தாயாரை காணாமல் போயுள்ளார். அவரை வைத்தியசாலையில் தேடிய போது அவர் காணாமல் போயுள்ளார். அவர் வீட்டிற்கு சென்று திரும்புவார் என வைத்தியர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால் அவர் மீண்டும் வைத்தியசாலைக்கு வராமல் போயுள்ளார் இதனையடுத்து குறித்த குழந்தையை விட்டுவிட்டு தாய் தப்பியோடியுள்ளார் என தெரியவந்தது. 

இதனையடுத்து இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் பொலிசாருக்கு முறைப்பாடு செய்துள்ளதையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று குறித்த தாயை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10