(இராஜதுரை ஹஷான்)
யானை - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வை பெறுவதற்கு மின்வேலி மற்றும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க புகையிரத திணைக்களத்தினால் அகற்றப்பட்ட தண்டவாளங்களை இலவசமாக பெற்றுக்கொள்ள வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19 மாவட்டங்களில் 133 பிரதேச செயலகப்பகுதியிலும் யானை - மனித மோதல் தீவிரமாக காணப்படுகிறது.
யானை - மனித மோதல்களை கட்டுப்படுத்த வனஜீவராசிகள் அமைச்சு பல்வேறு மூலோபாய நடவடிக்கைகளை முன்னைடுத்துள்ளது.
மின் வேலி அமைத்தல், பாதுகாப்பு வேலி அமைத்தல், 1500 கிலோ மீற்றர் மின்வேலிகளுடன் கூடிய யானை பாதுகாப்பு மத்திய நிலையத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மரம் மற்றும் கொங்கிறீட் ஆகியவற்றை பயன்படுத்தி பாதுகாப்பு வேலிகளை அமைப்பது சாத்தியமற்றதாக காணப்படுகிறது. இரும்பிலான பாதுகாப்பு வேலிகளை அமைக்க தீர்மானித்துள்ளது.
இதற்கமைய புகையிரத திணைக்களத்தினால் அகற்றப்பட்ட தண்டவாளங்களை இலவசமாக பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM