சுகாதாரத்துறை நிபுணர்களின் பரிந்துரைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுகின்றன - கரு

03 Nov, 2020 | 01:42 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் சுகாதார சேவையின் செயற்திறனை உயர்த்துதல் உள்ளடங்கலாக சுகாதாரத்துறை நிபுணர்களின் பரிந்துரைகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

அவற்றை கருத்திலெடுப்பதன் ஊடாகவே நாடு தொடர்ச்சியாக முடக்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் செயற்திறன் வாய்ந்தவையாக இல்லை என்று கரு ஜயசூரிய தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவருகின்றார். 

இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகள், குறிப்பாக எழுமாற்றாக மேற்கொள்ளும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் சுகாதாரசேவையின் செயற்திறனை உயர்த்துதல் ஆகிய ஆலோசனைகள் தொடர்ச்சியாகக் கருத்திலெடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மேலும் தற்போது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சுமார் 20,000 மாதிரிகள் நிலுவையில் இருப்பதாகவும் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் முச்சக்கரவண்டிகளில் தங்கியிருக்கும் நிலையேற்பட்டிருப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளமை குறிப்பாகக் கவனத்திலெடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.

அத்தோடு எமது நாட்டிலுள்ள சுகாதாரசேவை வசதிகளின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களைக் கையாளமுடியுமென்றால் மாத்திரமே நாட்டில் முடக்கத்தை நீக்கி, வழமைபோன்று செயற்பட அனுமதிக்க முடியும்.

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை மற்றும் செயற்திறனை அதிகரித்தல், தொற்றுக்குள்ளானவர்களை முறையாக தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் ஊடாக மாத்திரமே இந்தத் தொடர்ச்சியான முடக்கத்தைத் தவிர்க்க முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54