(எம்.மனோசித்ரா)
2020 கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை இம்மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் , தற்போதுள்ள சூழலைக்கருத்திற் கொண்டு இரு வாரங்கள் தாமதாக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற்க் கொண்டு நவம்பர் 9 ஆம் திகதி மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து சுகாதார அமைச்சிடம் பரிந்துரைகளைக் கோரியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்திருந்தார். அதற்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 9 ஆம் திகதி இரண்டாம் தவணை விடுமுறை வழங்கி இம்மாதம் 9 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஏற்கனவே கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
எனினும் கம்பஹா மாவட்டத்தில் ஒக்டோபர் 4 ஆம் திகதி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் இனங்காணப்பட்டதையடுத்து ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM