(எம்.மனோசித்ரா)
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் துணை ஊழியர் ஒருவருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று திங்கட்கிழமை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தொற்றுக்குள்ளான குறித்த ஊழியர் தற்போது அரச வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஊழியரின் கடமைகளை கவனத்தில்கொள்ளும் போது அவர் உயர் ஸ்தானிகராலய கட்டடத்துடனும் அதிகாரிகளுடனும் குறைந்தளவிலான தொடர்பினையே கொண்டிருக்கும் நிலையில் முதன்மை தொடர்பாளர்கள் சுகாதார பாதுகாப்பு நியமங்களுக்கு அமைவாக பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் ஏனைய நடைமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
கொவிட்19 நிலைமையை கருத்தில்கொண்டு இந்திய உயர் ஸ்தானிகராலயம் மிகவும் குறைந்த வலுவுடன் கடந்த சில வாரங்களாக இயங்கி வருகிறது. இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கும் வழிமுறைகளுக்கு அமைவாக அவசியமான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அதேவேளை உயர் ஸ்தானிகராலய வளாகம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டுள்ளது.
கொவிட்19க்கு எதிரான போராட்டங்களில் சாத்தியமான சகல ஒத்துழைப்புக்களையும் இலங்கைக்கு வழங்குவதற்கும் உதவுவதற்கும் இந்தியா உறுதியுடன் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM