(நா.தனுஜா)
இலங்கை மற்றும் மாலைதீவு பி.ப்ரோன் நிறுவனம் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 10,000 கே.என் 95 முகக்கவசங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றது.
இதுகுறித்து சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் கம்பனிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நிதி மற்றும் உபகரண உதவிகளை வழங்கிவருகின்றன.
அந்தவகையில் இலங்கை மற்றும் மாலைதீவு பி.ப்ரோன் நிறுவனம் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 10,000 கே.என் 95 முகக்கவசங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றது.
நிறுவனத்தின் பணிப்பாளர் பிரதீப் அமரவர்தன முகக்கவசங்களை நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM