இறக்குமதி செய்யப்படும் மீன், கருவாடு, மாசி, நெத்தலி மீன் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் மீன்வள துறையை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் அமலாகும் வகையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் மீனுக்கு 200 ரூபா வரி அறவிடப்படுகின்றது.
இதற்கமைய ஒரு கிலோகிராம் கருவாட்டுக்கு 127 ரூபாவும், மாசி ஒரு கிலோகிராம் 302 ரூபாவுக்கும் நெத்தலி மீன் ஒரு கிலோகிராமிற்கு ஒரு ரூபாவும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தையில் மீன் விற்பனைகள் குறைவடைந்துள்ள நிலையில், அவை உலர்ந்த மீன்களாக மாறுவதனால் தேசிய உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM