கொரோனா தொற்றுக்குள்ளாகி மீண்டு வந்துள்ள உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரெனால்டோ மீண்டும் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
போர்த்துக்கல் கால்பந்து அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப் போட்டியில் இத்தாலியின் யுவன்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அண்மையில் இவருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் இத்தாலியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட இவர், பார்சிலோனாவுடன் சாம்பியன்ஸ் லீக் மோதல் உட்பட பல போட்டிகளில் மோதவில்லை.
அண்மையில் ரொனால்டோவுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் குணமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந் நிலையிலேயே அவர் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெசியா அணியுடனான போட்டியில் யுவன்டஸ் அணிக்காக களமிறங்கி வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் யுவன்டஸ் அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அணி சார்பில் ரொனால்டோ இரண்டாவது மற்றும் மூன்றாவது கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM