இன்றைய திகதியில் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இளம் வயதிலேயே ஏற்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் உலகளவில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. தொடக்க நிலையில் மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டால் மருந்தியல் துறை, சத்திர சிகிச்சை துறை, கதிரியக்க சிகிச்சை துறை ஆகிய மூன்று துறைகளின் ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்தலாம்.
பொதுவாக தெற்காசிய நாடுகளில் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்மணிகளுக்கு தான் மார்பகப் புற்றுநோய் அதிக அளவில் ஏற்பட்டது, ஆனால் தற்போது இளம் வயதினர் பலர் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பத்து வயதிற்குள் பெண்கள் பூப்படைந்தால் அவர்களுக்கு எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்றும், மரபு ரீதியான பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு கூட 40 வயதுக்கு முன்னரே மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.
வேறு சிலருக்கு குழந்தை பிறந்து இரண்டு வருடங்களுக்குள் தாய்ப்பால் வழங்காததும், அதற்குப் பிறகு ஏற்படும் உடல் பருமனைக் கட்டுப்படுத்தாததன் காரணமாகத்தான் மார்பக புற்றுநோய் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
டொக்டர் பிரேம் குமார்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM