நாட்டில் இன்றையதினம் மேலும் 140 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில், 78 பேர் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையிலிருந்தும், 19 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்தும், 18 பேர் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலிருந்தும், 08 பேர் தெல்தெனிய வைத்தியசாலையிலிருந்தும், 04 பேர் கொஸ்கம வைத்தியசாலையிலிருந்தும், தன்கொட்டுவ வைத்தியசாலை,கல்கமுவ வைத்தியசாலை,றம்புக்கண வைத்தியசாலை மற்றும் இணவில வைத்தியசாலையிலிருந்து தலா மூன்று பேரும், ஒருவர் மினுவாங்கொடை வைத்தியசாலையிலிருந்தும் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,282 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 9,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 5,490 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன் 444 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM