மட்டக்களப்பு தலைமையக்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் இருந்து துப்பாக்கியொன்றும் வாள் ஒன்றும் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சவுக்கடி கடற்கரையினை அண்டிய பகுதியில் உள்ள பற்றைக்காட்டுக்குள் உரப் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் குறித்த ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர மெண்டிசின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையில் ஏ.ஆர்.குமார, சி.கே.விஜயரட்ன, ஏ.துதி,ஏ.ஆர்.விஜயசிங்க ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
இதன்போது கட்டுத்துப்பாக்கியொன்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவை எதற்காக பயன்படுத்தப்பட்டது, யாரால் கொண்டுவந்து புதைக்கப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM