(செ.தேன்மொழி)
திருக்கோவில் மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று - திருக்கோவில் பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, எட்டு துப்பாக்கிகளுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கிகள் ஏழும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, ஹிக்கடுவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மேலும் ஒரு சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து ரி-56 துப்பாக்கி, உள்நாட்டு துப்பாக்கி, உள்நாட்டு கைக்குண்டுகள் மற்றும் ரி-56 துப்பாக்கி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM