கடந்த சனிக்கிழமையன்று செனகல் நகரமான எம்பூரிலிருந்து சுமார் 200 புலம்பெயர்ந்தோர் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்ட படகு மூழ்கியதில் 140 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த படகு சென்று கொண்டு இருக்கும் போது திடீர் என தீப்பிடித்து செனகலின் வடமேற்கு கடற்கரையில் செயிண்ட் லூயிஸுக்கு அருகில் மூழ்கியுள்ளது.
செனகல், ஸ்பானிஷ் கடற்படைகள் மற்றும் அருகில் இருந்த மீனவர்கள் 59 பேரை உயிருடன் மீட்ட நிலையில், 20 பேரின் சடலங்களையும் மீட்டுள்ளனர். இதேவேளை, ஏனையோரின் சடலங்கள் மீட்கப்படாத நிலையில் அவர்கள் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆபிரிக்காவிலிருந்து கேனரி தீவுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு நான்கு மடங்காக 11,000 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 663 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் பதிநான்கு படகுகள் செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் இந்த பயணத்தை மேற்கொள்ள முயற்சித்த நிலையில், அவற்றில் பல படகுகள் விபத்தில் சிக்கி மூழ்கி உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM