உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று சர்வதேச பக்கவாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாத நோயைத் தடுப்பது, அதற்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதே இன்றைய தினத்தின் பிரதான நோக்கம்.
பக்கவாதத்தால் உலகம் முழுவதும் இருபது மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகிறார்கள். மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்களில் இரத்த கசிவு, இரத்தவோட்டத்தில் தடை, மூளையிலுள்ள இரத்த குழாய்களில் அடைப்பு போன்ற காரணங்களில் பக்கவாதம் ஏற்படுகிறது. விளக்கமாக சொல்லவேண்டும் என்றால், இரத்த குழாய்களின் வழியாக மூளைக்கு கிடைக்கவேண்டிய ஓட்சிஜன் மற்றும் சத்துக்கள் கிடைக்காததால் அதனுடன் தொடர்புடைய உடலுறுப்புகள் செயலற்றதாகிவிடுகின்றன.
அதாவது வலது இடது என இரண்டு பக்க மூளைக்குச் செல்லும் இரத்தகுழாய்களில் அடைப்பு அல்லது தடை ஏற்படும் போது, அதனுடைய கட்டுப்பாட்டிலுள்ள வலது மற்றும் இடது பக்க உடலுறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
இரத்த அழுத்தம், நீரிழிவு, நரம்புத்தளர்ச்சி, இதய நோய், பாரம்பரிய மரபணு, மது மற்றும் புகைப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, உணவுக்கட்டுப்பாட்டின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் தான் மூளை பகுதியிலுள்ள இரத்த குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை தவிர்க்கவேண்டும் என்றால், சத்துள்ள சரிசமவிகித உணவு, உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை பின்பற்றவேண்டும்.
பக்கவாத பாதிப்பு ஏற்பட்டவர்கள் கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் காலஅவகாசத்திற்குள் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைப் பெற்றால், அவர்களை பக்கவாத பாதிப்பிலிருந்து முழுமையாக மீட்கலாம். சிலருக்கு சிகிச்சையுடன் இயன்முறை மருத்துவ பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டியதிருக்கும்.
டொக்டர் கோட்டீஸ்வரன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM