எகிப்தில் செங்கடலுக்கு அருகிலுள்ள ஷர்ம் எல்-ஷேக் நகரத்திலுள்ள சுற்றுலாத்தளத்திற்கு அருகில் கடல் பகுதியில் சுறா மீனின் தாக்குதலில் 12 வயதுடைய சிறுவன் கையை இழந்துள்ளதோடு, அவரது தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
எகிப்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஸ் முகமது தேசிய பூங்கா அருகில் கடல் பகுதியில் நீந்திக் கொண்டிருந்தபோதே உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் சுறாவால் தாக்கப்பட்டனர் என்று உக்ரைனின் சுற்றுலா மேம்பாட்டு அரசு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாய்க்கு ஆழமான கடித்த காயங்கள் இருந்தன. அதேநேரத்தில் குழந்தையின் முழங்கைக்குக் கீழே உள்ள மேல் மூட்டு துண்டிக்கப்பட்டு முதுகில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷர்ம் எல்-ஷேக் ராஸ் முகமது தேசிய பூங்கா நீர் சவாரி அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு உக்ரேனிய சுற்றுலா பயணிகள் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
ஓசியானிக் வைட்டீப் என்ற சுறாவே தாக்குதல் நடத்தியுள்ளது. இது இரண்டு மீற்றர் நீளம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சுறா தாக்குதலை விசாரிக்க நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சரால் ஒரு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த பகுதியில் நீருக்கடியில் படமாக்கப்பட்ட ஒரு வீடியோ சுறாவின் "மனிதர்களுக்கு எதிரான விரோதப் போக்குகளால் வகைப்படுத்தப்படும் அசாதாரண நடத்தையை" காட்டுவதாக அல் அஹ்ரம் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இவ்வருடம் 2020 ஆம் ஆண்டில் 17 முதல் 63 வயதுக்கிடைப்பட்ட எட்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சுறாக்களால் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM