தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி லீ மியுங்-பாக் கிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக முன்னர் பிறப்பிக்கப்பட்ட 17 ஆண்டுகால சிறைத் தண்டனையை தென் கொரியாவின் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சம்சுங் உள்ளிட்ட தென் கொரியாவின் பெரிய நிறுவனங்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை இலஞ்சமாக பெற்றமை, தனக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தின் பெருநிறுவன நிதியை மோசடி செய்தல் மற்றும் தென் கொரியாவின் உளவு அமைப்பின் உத்தியோகபூர்வ நிதியை தவறாக பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு லீ மியுங்-பாக் கிற்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லீ மியுங்-பாக் 2008-2013 வரையான காலப் பகுதியில் ஜனாதிபதியாக இருக்கும் முன்னரும், பின்னரும் இந்த குற்றங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
லீக்கு ஆரம்பத்தில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பல மாதங்கள் கழித்து அவர் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எனினும் இந்த ஆண்டு பெப்ரவரியில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில் தென் கொரியாவின் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இந் நிலையில் லீ யின் பிணை இரத்து தொடர்பான உத்தரவு தொடர்பில் முறையிட ஆறு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆறு நாட்ககளின் பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.
78 வயதான லீ, வணிக பின்னணியுடன் தென் கொரியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்தார், ஒரு காலத்தில் நாட்டின் பொருளாதார உயர்வை அடையாளப்படுத்தினார்.
அவர் 1960 களின் நடுப்பகுதியில் ஹூண்டாய் குழுமத்தின் கட்டுமானப் பிரிவில் நுழைவு நிலை வேலையுடன் தனது வணிக வாழ்க்கையைத் தொடங்கினார்.
அவர் ஹூண்டாய் குழுமத்தின் கீழ் 10 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்ததற்கு முன்பு, தென் கொரியாவின் பொருளாதாரம் வெடிக்கும் வகையில் வளர்ந்த நேரத்தில் குழுவின் விரைவான உயர்வுக்கு வழிவகுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM