தனியார் அல்லது அரச பஸ்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பஸ்ஸுன் இலக்கத்தை கவனத்திற் கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதற்கு அமைவாக பயணிகள் அவதானிக்க கூடிய வகையில் பஸ்களின் இலக்கங்களை காட்சிப்படுத்துமாறும் சகல பஸ் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பேலியகொடை கொத்தணியின் பின்னர், பலர் பஸ்களில் பயணம் மேற்கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், தாங்கள் பயணித்த பஸ்கள் எவை என்பதை அடையாளப்படுத்துவதற்காக அதன் இலக்கங்களை அவர்களினால் நினைவுபடுத்திக் கூறமுடியாத நிலைமை உள்ளது.
ஆகவே தான், அரச மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்மூலம் பஸ்களில் பயணிக்கும் பயணிகள், தாங்கள் பயணித்த பஸ்களின் இலக்கங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
குறித்த பஸ்களில், கொவிட்-19 நோயாளர் ஒருவர் பயணித்திருந்தால், அந்தப் பஸ்ஸில் பயணித்த ஏனையவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அறிவித்தல்களை வழங்க தங்களுக்கு இலகுவானதாக இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM