பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான பொலிஸாரின் அறிவித்தல்

Published By: Vishnu

28 Oct, 2020 | 11:14 AM
image

தனியார் அல்லது அரச பஸ்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பஸ்ஸுன் இலக்கத்தை கவனத்திற் கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கு அமைவாக பயணிகள் அவதானிக்க கூடிய வகையில் பஸ்களின் இலக்கங்களை காட்சிப்படுத்துமாறும் சகல பஸ் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பேலியகொடை கொத்தணியின் பின்னர், பலர் பஸ்களில் பயணம் மேற்கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், தாங்கள் பயணித்த பஸ்கள் எவை என்பதை அடையாளப்படுத்துவதற்காக அதன் இலக்கங்களை அவர்களினால் நினைவுபடுத்திக் கூறமுடியாத நிலைமை உள்ளது.

ஆகவே தான், அரச மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதன்மூலம் பஸ்களில் பயணிக்கும் பயணிகள், தாங்கள் பயணித்த பஸ்களின் இலக்கங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குறித்த பஸ்களில், கொவிட்-19 நோயாளர் ஒருவர் பயணித்திருந்தால், அந்தப் பஸ்ஸில் பயணித்த ஏனையவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அறிவித்தல்களை வழங்க தங்களுக்கு இலகுவானதாக இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04