பிலிப்பைன்ஸின் வடக்கு சமர் மாகாணத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட சேவல் சண்டை மீதான சுற்றிவளைப்பின்போது சேவல் தாக்கி பொலிஸார் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
சேவல் சண்டை என்பது பிலிப்பைன்ஸில் முன்னெடுக்கப்படும் பிரபல்யமான விளையாட்டாகும். போட்டியின்போது நிர்ணயிக்கப்படும் பந்தயங்கள் மூலமாக பணமும் சம்பாதிக்கப்படுகிறது.
பந்தயத்தில் பறக்கவிடப்படும் சேவல்களின் கால்விரல்களுக்கு நடுவே கூர்மையான பிளேட் போன்ற ஆயுதங்களும் கட்டடுப்படுகிறது.
இந் நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பிலிப்பைன்ஸில் சேவல் சண்டை உட்பட ஏனைய விளையாட்டுகளுக்கும், நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த தடை உத்தரவுகளையும் மீறி வடக்கு சமர் மாகாணத்தின் ஜோஸ் நகரில் கடந்த திங்கட்கழமை சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்துள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக சேவல் ஒன்று பொலிஸ் அதிகாரியை தனது காலில் கட்டப்பட்ட கூர்மையான பிளேட்டினால் தாக்கியுள்ளது.
இதனால் கடும் காயத்துக்குள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மாகாண பொலிஸ்துறை தலைவர்,
இது ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து, இது தொடர்பில் தனக்கு முதலில் முறைப்பாடு அளிக்கப்படடபோது என்னால் இதை நம்ப முடியவில்லை.
ஒரு பொலிஸ் அதிகாரியாக 25 ஆண்டுகளில் ஒரு சேவலினால் தாக்கப்பட்டு ஒரு மனிதன் உயிரிழந்தமை இது முதல் சந்தர்ப்பமாகும் என்றார்.
பொலிஸாரின் இந்த சுற்றிவளைப்பின்போது மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 7 சண்டை சேவல்களும், 550 பிலிப்பைன்ஸ் பெசோவும் ($11; £8) பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM