பாணந்துறை,மொரட்டுவ மற்றும் ஹோமாகமவில் நேற்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ளவர்கள் மறு அறிவித்தல் வரும் வரை களனிவெளி மற்றும் கடலோரப் பாதைகளில் இயங்கும் ரயில் சேவைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தெரிவித்துள்ளது.
பாணந்துறை,ஹோமாகம,ஹோமாகம வைத்தியசாலை மற்றும் மாகும்புர உப ரயில் நிலையங்கள் உள்ளிட்ட களனிவெளி ரயில் பாதையில் மீகொடவிலிருந்து கொட்டாவ வரை ரயில் நிலையங்களை பயன்படுத்துபவர்களுக்கு ரயில் சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என தெரிவித்துள்ளது.
வாதுவையிலிருந்து அங்குலானா ரயில் நிலையங்களுக்கு பின்வத்த, பாணந்துறை, எகட உயன, கொரலவெல்ல, மொரட்டுவ மற்றும் லுனவ உப ரயில் நிலையங்கள் உள்ளிட்ட கடலோர பாதையில் இயங்கும் ரயில்களை மக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற உதவி ஊழியர்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ரயில் சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM