அமெரிக்காவில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 500,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் நகரங்கள் குறிப்பாக அமெரிக்க மையப்பகுதியில் பரவி வரும் வைரஸைக் கட்டுப்படுத்த கடுமையான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன.
அமெரிக்காவில் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி ஜனவரி 21 ஆம் திகதி இனங்காணப்பட்டார். மேலும் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை நாடு முழுவதும் மொத்தம் 500,000 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்படவில்லை.
தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் பரிசோதனை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.
கடந்த வாரத்தில் அமெரிக்காவில் நாளாந்த சராசரியாக 71,000 புதிய கொரோனா நோயாளர்களை பதிவு செய்துள்ளது. இது இரண்டு வாரங்களுக்கு முந்தைய சராசரியிலிருந்து 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இல்லினாய்ஸ் உட்பட பதினெட்டு மாநிலங்கள் ஏழு நாட்களில் சராசரியாக புதிய கொரோனா நோயாளர்களை பதிவு செய்துள்ளன.
மேலும் மூன்று மாநிலங்கள் (டென்னசி, விஸ்கான்சின் மற்றும் ஓக்லஹோமா) உயிரிழப்புகள் கடந்த ஏழு நாட்கள் அதிகரித்துள்ளது. செவ்வாயன்று, ஓக்லஹோமா மற்றும் வயோமிங் ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 9,038,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 232,084 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM