இத்தாலியில் பச்சை நிறத்தில் நாய் குட்டியொன்று பிறந்துள்ளது. இச்சம்பவம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இத்தாலியின் பட்டாடா நகரை சேர்ந்த கிறிஸ்டின் மலோசி எனும் கிறிஸ்டின் மலோசி, பப்பி ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதன் பெயர் ஸ்பெலாச்சியா. கருவுற்று இருந்த ஸ்பெலாச்சியா கடந்த 9ஆம் திகதி ஐந்து குட்டிகளை ஈன்றெடுத்ததுள்ளது.
இந்த ஐந்து குட்டிகளில் ஒரு குட்டி பச்சை நிறத்தில் பிறந்திருக்கிறது. பொதுவாக பச்சை நிறத்தில் நாய்களை பார்ப்பது மிகவும் அரிதானது. எனவே ஸ்பெலாச்சியாவின் இந்த பச்சை நிற நாய் குட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பச்சை நிற நாய் குட்டிக்கு பிசாட்சோ என பெயர் சூட்டியுள்ளார் கிறிஸ்டின்.
அதாவது பிஸ்தா நிறத்தை குறிக்கும் வகையில் நாய் குட்டிக்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த கொடிய கொரோனா காலத்தில், பச்சை நிறம் என்பது நம்பிக்கையையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் நிறமாக தான் கருதுவதாக விவசாயி கிறிஸ்டின் மலோசி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM