மு.கா. ஒருபோதும் பிளவடையாது - ஹாபீஸ் நசீர் அஹமட் திட்டவட்டம்

Published By: Digital Desk 3

24 Oct, 2020 | 02:15 PM
image

(ஆர்.ராம்)

ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸிற்குள் எவ்விதமான பிரிவுகளோ பிளவுகளோ ஏற்படப்போவதில்லை. கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீமின் கீழ் ஒன்றுபட்ட பயணம் தொடரும் என்று அக்கட்சியின் பிரதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். 

அதேநேரம், எதிர்வரும் காலத்தில் மு.கா.நடுநிலையான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல்கள் கட்சியின் உயர்மட்டத்தில் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றிருந்தது. 

இந்தக் கூட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்றக்குழுவானது தலைவர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது நாம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தோம். குறிப்பாக எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடுநிலையுடன் தொடர்ந்தும் செயற்படுவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சமுகம் சார்ந்து கட்சியின் தலைமையின் கீழ் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவடையும் என்றவாறான கருத்துக்கள் முழுவதும் உண்மைக்கு புறம்பானவை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக செயற்படவுள்ளோம் என்றார்.

இதேவேளை, 20ஆவது திருத்தச்சட்டத்திற்கான ஆதரவு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்தவர், 20ஆவது திருத்தச்சட்டத்திற்கான ஆதரவு தொடர்பில் நாம் தீர்மானம் எடுக்கின்றபோது, தலைமைக்கு அறிவிக்கப்பட்டது. சபையில் வைத்து தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு இறுதி நேரத்தில் எடுக்கப்பட்டது. அதன் பின்னரே நான் உள்ளிட்ட உறுப்பினர்கள் சபையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தோம். நாம் ஆதரவு தெரிவிக்கப்போவதாக தலைமையிடம் தெரிவித்தபோது, சுயதீர்மானத்தின் பிரகாரம் வாக்களிப்பதற்கு தலைமையினால் இடமளிக்கப்பட்டது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51