( எம்.எப்.எம்.பஸீர்)
தனது பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கோரி, பொடி லெஸி என பரவலாக அறியப்படும் பாதாள உலகத் தலைவராக பொலிஸாரால் அடையாளப்படுத்தப்படும் ஜனித் மது சங்க ரிட் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.
இந்த ரிட் மனுவை நேற்று ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா அடங்கிய குழுவினர், எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி மன்றில் ஆஜராக பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவிடுமாறு ஜனித் மதுசங்க எனும் பொடி லெஸி மேன் முறையீட்டில் தாக்கல் செய்துள்ள அந்த ரிட் மனு ஊடாக கோரியுள்ளார்.
கைது செய்யப்பட்டிருக்கும் இந்த சூழலில் தனது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என பூசா சிரைச்சாலை அத்தியட்சர், பூசா சிரையின் பிரதான சிறை அதிகாரி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபரிடம் இருந்து உறுதியொன்றினை பெற்றுத் தர உத்தரவிடுமாறு அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த ரிட் மனுவில் பிரதிவாதிகளாக, பூசா சிறையில் அத்தியட்சர், பூசா சிறையின் பிரதான சிறை அதிகாரி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம்), சிறைச்சாலை ஆணையாளர் ( நிர்வாகம் மற்றும் உளவுப் பிரிவு), சிறைச்சாலை பிரதான புலனாய்வு அதிகாரி மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே பிரதிவாதிகளை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி மன்றில் ஆஜராக அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM