தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பத்து விக்கட்டுகளால் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஷார்ஜாவில் இடம்பெற்ற இன்றைய ஐ.பி.எல் தொடரின் 41-வது லீக் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்னயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 ரிக்கட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில், 115 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் கலம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி ஆட்டத்தில் 116 ஓட்டங்களை பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது.
இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குயின்டன் வீகொக் ஆட்டம் இழக்காது 46 ஓட்டங்களையும், இஷான் கிஷான் ஆட்டம் இழக்காது 68 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.
இந்தத் தோல்வியின் மூலம் ஐ .பி.எல் இன் இந்த தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. அதேவேளையில், மும்பை அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM