யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை - சங்கரத்தையை சேர்ந்த 43 வயதான அரிச்சுனன் சிவகரன் என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்படி நபர் குடத்தனை மேற்கு விளாங்காட்டுப் பகுதியில் தண்ணீர் தாங்கி ஒன்று அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்னர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றுவிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தண்ணீர் தாங்கி அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் சில இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் காணாமல் போனதாக தெரிவித்து பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தரை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் கொண்டு சென்று விசாரணையின் பின் விடுவித்துள்ளனர்.
அங்கிருந்து காணாமல் போன பொருட்களுக்கும் தனக்கும் எதுவித தொடர்பில்லை எனவும் பொலிசார் வெள்ளிக்கிழமையும் மீண்டும் தன்னை விசாரணைக்கு அழைத்ததாகவும் தொலைபேசியில் குறிப்பிட்டிருந்ததாக உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பாக தமக்கு சந்தேகம் இருப்பதாக உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM