தொழில்நுட்ப உத்தியோகத்தர் தூக்கிட்டு தற்கொலை - யாழில் சம்பவம்

23 Oct, 2020 | 09:26 PM
image

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை - சங்கரத்தையை சேர்ந்த 43 வயதான அரிச்சுனன் சிவகரன் என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி நபர் குடத்தனை மேற்கு விளாங்காட்டுப் பகுதியில் தண்ணீர் தாங்கி ஒன்று அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்னர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றுவிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தண்ணீர் தாங்கி அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் சில இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் காணாமல் போனதாக தெரிவித்து பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தரை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் கொண்டு சென்று விசாரணையின் பின் விடுவித்துள்ளனர்.

அங்கிருந்து காணாமல் போன பொருட்களுக்கும் தனக்கும் எதுவித தொடர்பில்லை எனவும் பொலிசார்  வெள்ளிக்கிழமையும் மீண்டும் தன்னை விசாரணைக்கு அழைத்ததாகவும் தொலைபேசியில் குறிப்பிட்டிருந்ததாக உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பாக தமக்கு சந்தேகம் இருப்பதாக உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10