திருமலையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ; 13 இளைஞர்களுக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

23 Oct, 2020 | 02:49 PM
image

திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு  குழுக்களுக்கிடையிலான சண்டையில் ஈடுபட்ட 13 சந்தேக நபர்களை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது நேற்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.

யூனிட் 07,முள்ளிப்பொத்தானை, திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 13 இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் தெரிவிப்பதாவது,

முள்ளிப்பொத்தானை பகுதியிலுள்ள பாத்திமா விளையாட்டு மைதானத்தில்  உதைபந்து மற்றும் கிரிக்கெட்  விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் இக்கோஸ்டி மோதலில் இரு இளைஞர்கள் காயங்களுடன் கிண்ணியா வைத்தியசாலையிலும், மற்றுமொரு இளைஞர் கந்தளாய் தள வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏனைய இளைஞர்கள் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி சி டிவி காணொளிகள் மூலம் கைது செய்யப்பட்டு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13