திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையிலான சண்டையில் ஈடுபட்ட 13 சந்தேக நபர்களை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது நேற்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.
யூனிட் 07,முள்ளிப்பொத்தானை, திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 13 இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் தெரிவிப்பதாவது,
முள்ளிப்பொத்தானை பகுதியிலுள்ள பாத்திமா விளையாட்டு மைதானத்தில் உதைபந்து மற்றும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் இக்கோஸ்டி மோதலில் இரு இளைஞர்கள் காயங்களுடன் கிண்ணியா வைத்தியசாலையிலும், மற்றுமொரு இளைஞர் கந்தளாய் தள வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏனைய இளைஞர்கள் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி சி டிவி காணொளிகள் மூலம் கைது செய்யப்பட்டு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM