(எம்.மனோசித்ரா)
தனிசிங்கள ஆட்சியமைப்பதாகக் கூறி இனவாத பிரசாரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற அரசாங்கம் தற்போது முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவுடனேயே 20 ஐ நிறைவேற்றிக் கொண்டது.
பணத்திற்காகவும் பதவிக்காகவும் காட்டிக் கொடுக்கும் உறுப்பினர்கள் சஜித் அணியிலேயே உள்ளார்கள் என்பதை நாம் தேர்தலுக்கு முன்னரே மக்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம் என்று மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
தற்போதைய அரசாங்கம் பௌத்த மக்கள் மத்தியில் ஏனைய மதங்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி தனி சிங்கள ஆட்சியமைப்பதாக அந்த மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது ஹக்கீம் , ரிஷாத் ஆகியோரின் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடனேயே 20 ஐ நிறைவேற்றிக் கொண்டுள்ளது.
உண்மையில் அரசாங்கத்திற்கு 20 ஐ நிறைவேற்றிக் கொள்வதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படவில்லை. பங்காளிக்கட்சிகளுடன் இணைத்து ஆளுந்தரப்பில் 150 உறுப்பினர்கள் உள்ளனர்.
அவற்றில் சபாநாயகரை தவிர்த்தால் 149 உறுப்பினர்கள். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. எனவே அரசாங்கத்திற்கு 148 வாக்குகள் மாத்திரமே காணப்பட்டது. அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்ல.
மூன்றில் இரண்டுக்கு 3 வாக்குகளே தேவைக்கப்பட்ட போதிலும் சஜித் தரப்பில் 8 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்தை சுலபமாக காப்பாற்றிவிட்டனர்.
பதவிக்காகவும் பணத்திற்காகவும் காட்டிக்கொடுக்கும் உறுப்பினர்கள் சஜித் தரப்பிலேயே உள்ளனர் என்பதை நாம் ஆரம்பத்திலேயே மக்களுக்கு தெரிவித்துள்ளோம். எனவே இனியாவது இனவாதத்திற்குள் சிக்கி ஏமாறாமல் சிந்தித்து செயற்படுமாறு நாம் மக்களுக்கு வலியுறுத்துகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM