திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன நேற்று (22.10.2020) 30 வருட அரச சேவையின் பின்னர் ஓய்வு பெற்றார்.
இதனை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது.பெப்ரவரி 14ஆம் திகதி முதல் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இவர் குறுகிய காலத்தில் மாவட்ட மக்களுக்கு இன , மத, மொழி வேறுபாட்டின்றி அளப்பறிய சேவையை வழங்கியுள்ளார்.
ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன
மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு மக்களது உரிய பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைப்பதிலும் அதேபோன்று உரிய திணைக்களங்களை தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்தும் செயற்படுவதில் வல்லவராக இவர் காணப்பட்டமை விசேட அம்சமாகும்.
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி இலங்கை நிர்வாக சேவைக்குள் இணைந்த இவர் லாஹுகல,தெஹியத்தகண்டிய உதவி பிரதேச செயலாளராகவும் லாஹுகல பிரதேச செயலாளராகவும்,அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றினார்.
பின்னர் கடற்றொழில் மற்றுமர நீரியல் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளராகவும் கிழக்கு மாகாண கல்வியமைச்சு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகவும் அரசாங்க அதிபராக பதவியேற்க முன்னர் சேவையாற்றுயமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM